முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான போட்டியில் இருந்து தென்ஆப்ரிக்க வீரர் விலகல்

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு : தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் காயம் காரணமாக இலங்கைக்கு எதிராக எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

3-வது ஒருநாள்

தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இலங்கை அணி பேட்டிங் செய்தபோது, 10-வது ஓவரில் டு பிளிசிஸ் கேட்ச் பிடிக்க முயற்சி செய்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின் பீல்டிங் செய்ய வரவில்லை.

4-வது போட்டி

இந்நிலையில் தோள்பட்டை காயத்திற்காக 6 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் எஞ்சிய இரண்டு ஒருநாள் மற்றம் ஒரெயொரு டி20 போட்டியில் இருந்து டு பிளிசிஸ் விலகியுள்ளார். ஏற்கனவே முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 3-0 எனக் கைப்பற்றியுள்ளது. இன்று 4-வது போட்டி நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து