முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி உடல் மக்களின் அஞ்சலிக்காக அதிகாலை ராஜாஜி ஹாலில் வைக்கப்படும் - தி.மு.க. பொதுசெயலாளர் அன்பழகன் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் இன்று அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று தி.மு.க. பொதுசெயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:-

உலகத் தமிழர்களையெல்லாம் மீளாத் துயரில்ஆழ்த்திவிட்டு விடைபெற்றுள்ள தமிழினத் தலைவர் கலைஞரின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் 8.30 முதல்நள்ளிரவு 1.00 மணி வரையிலும், சி.ஐ.டி. காலனி இல்லத்தில்அதிகாலை 3.00 மணி வரை குடும்பத்தினரும் உறவினர்களும்இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன் பின்னர் அதிகாலை 4 மணி முதல் ராஜாஜிஹாலுக்கு கொண்டு வரப்பட்டு கழக உடன்பிறப்புகளுக்கும்பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும்இறுதிவணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கழகத்தினரும், பொதுமக்களும், அரசியல் கட்சிதலைவர்களும் இதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து