முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்: கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

சென்னை : தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருந்த ராஜாஜி அரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் பலியாகினர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி  அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடந்தது. நேற்று காலையில் இருந்தே தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அங்கு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கில் தொண்டர்கள் கூடியிருந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் பலியாகினர். எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த செண்பகம் மற்றும் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவரது உடலும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 26 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து