முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்னணு தணிக்கை இயந்திரங்களை விருதுநகர் கலெக்டர் சிவஞானம் நேரில் ஆய்வு

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018      விருதுநகர்
Image Unavailable

   விருதுநகர்,-விருதுநகர் இராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் உள்ள வேளாண் விற்பனை கிட்டங்கியில் பெங்க@ர் பெல் நிறுவனத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மின்னணு தணிக்கை இயந்திரங்களை    அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவித்ததாவது:-
எதிர்வரும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக விருதுநகர் மாவட்டத்திற்கு 2580 மின்னணு தணிக்கை இயந்திரங்கள்    பெங்க@ர் பெல் நிறுவனத்திலிருந்து   கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் வாக்குப்பதிவின் போது, ஒரு வாக்காளர் எந்த சின்னத்திற்கு வாக்களித்தோம் என்று நேரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும், வரப்பெற்றுள்ள மின்னணு தணிக்கை இயந்திரங்களை விருதுநகர் இராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் உள்ள வேளாண் விற்பனை கிட்டங்கியில்; பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 2019-ம் ஆண்டு பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக பெங்க@ர் பெல் நிறுவனத்திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களான 4740 பேலட் யூனிட்டுகளும், 2580 கன்ட்ரோல் யூனிட்டுகளும் கொண்டு வரப்பட்டு, வேளாண் விற்பனை கிட்டங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  .அ.சிவஞானம், தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர்  .கோ.உதயக்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள்  .செல்லப்பா (அருப்புக்கோட்டை),  .மங்களராமசுப்பிரமணியன் (சாத்தூர்),  .தினகரன்(சிவகாசி), தனி வட்டாட்சியர் (தேர்தல்)  .லோகநாதன், விருதுநகர் வட்டாட்சியர்  சீனிவாசன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து