முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சனிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தின் கடலோர பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா கடலோரப் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்தப் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும், அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதலே பரவலாக பல இடங்களில் மழை பெய்தது. சென்னையிலும் விட்டு விட்டு மழை பெய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து