முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

  பரமக்குடி -: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மினி விளையாட்டு மைதானத்தில் அச்சாணி கைப்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியை பரமக்குடி சார்ஆட்சியர் விஷ்ணுசந்திரன் துவக்கி வைத்தார்.இத்துடன் பாலித்தின் பை ஒழிப்பு  கையேழுத்து விழிப்புணர்வு துவங்கப்பட்டது. ரஜினி மக்கள் மன்ற இளைஞரணி மாவட்ட செயலாளர் ராஜிவ்காந்தி மற்றும் நிர்வாகிகள் சுப்பு,நாகா,முத்துக்குமார்,வாசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். தமிழகத்தை சேர்ந்த 40 அணிகள் கலந்துகொண்டு பகல்-இரவு போட்டிகளாக நடைபெற்றது.கீழக்கரை எஸ்.வி.சி அணி முதல் பரிசையும்,கோயம்புத்தூர் ரெத்தினம் கல்லூரி அணி இரண்டாம் பரிசையும்,அச்சாாணி அணி மூன்றாம் பரிசையும்,இருமேனி அரசு பள்ளி நான்காம் பரிசைையும் பெற்றது.வெற்றி பெற்ற அணிகளுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி பரிசுகளை  வழங்கினார்.இப்போட்டிகான ஏற்பாடுகளை அச்சாணி கைப்பந்து கழகம் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து