முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் ராணுவம் பதிலடி: பாக். வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

ஜம்மு, காஷ்மீர் எல்லையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் பாகிஸ்தானை சேர்ந்த இரு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணும் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள டங்தார் எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் பாகிஸ்தானியர்களின் ஊடுருவல் முயற்சி நடைபெற்றது. இதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதற்குப் பதிலடியாக நேற்று முன்தினம் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் கலியா கூறுகையில்,
போர் நிறுத்த மீறல்களை பாகிஸ்தான் ராணுவம் செய்து வருகிறது. இதற்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் டங்தார் பகுதியில் தொடரும் பாகிஸ்தானியர்களின் ஊடுருவலை முறியடித்து வருகிறது. நமது ராணுவம் நேற்று முன்தினம் இரவு முன்னெடுத்த துல்லியமான நடவடிக்கைகளில் இரு பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து