முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றால அருவிகளில் 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு தடை விதிப்பால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

தென்காசி, குற்றாலம் அருவிகளில் நேற்று 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடக்கத்திலே குற்றாலத்தில் சீசன் ஆரம்பம் ஆகும். இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கியது. தொடர்ந்து குற்றாலம் மலைப்பகுதியில் கனமழை பெய்து வந்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.  இதனால் சீசன் களை கட்டியது.

இடையிடையே பலத்த மழை பெய்ததால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இடையில் ஓரிரு நாட்கள் மட்டுமே அருவிகளில் தண்ணீர் குறைவாக உள்ளது. தொடர்ந்து கடந்த 2 மாதத்திற்கும் மேலாக சீசன் முழுஅளவில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக குற்றாலம் மலைப்பகுதியில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.

இதனால் அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இன்று 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.  மெயினருவி, ஐந்தருவி ஆகிய பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குற்றாலம் புலியருவியில் நேற்று முன்தினம் குளிக்க சென்ற வாலிபர் பலியான சம்பவத்தை தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் புலியருவியில் விழுந்து வரும் ஓடை பகுதியில் வரும் தண்ணீரில் மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் மெயினருவியில் இருந்து வரும் தண்ணீர் சிற்றாற்றில் சேருவதாலும், காட்டாற்று வெள்ளம் காரணமாகவும் சிற்றாறில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தீவிர கண்காணிப்பு
ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. சிற்றாற்று கால்வாய்களிலும் அதிகளவு தண்ணீர் செல்கிறது.

இதனால் சிற்றாற்றின் கரையோர பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டார்கள். சிற்றாற்று பாசன குளங்களில் உடைப்பு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக சென்று கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து