முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வாகனத்தை விருதுநகர் கலெக்டர் சிவஞானம் கொடியசைத்து துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர் - விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தென்மேற்கு பருவமழையால் கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இடுக்கி மாவட்டத்திற்கு ரூ.5 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான வெள்ள நிவாரண அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவித்ததாவது:-
தென்மேற்கு பருவமழையால் கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு கேரளா மாநிலத்தில் பெயத கனமழையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொது மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, கோதுமை, பால் பவுடர், எண்ணெய், பெண்களுக்கு தேவையான உடைகள், நைட்டிஸ், பெட்சிட், பாய், லுங்கி குழந்தைகளுக்கு தேவையான நாப்கின்ஸ்  மற்றும் மருந்து பொருட்கள் போன்ற பொருட்கள் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
 அதாவது, ரூ. 70 ஆயிரம் மதிப்பலான அரிசி முட்டைகள், ரூ. 42 ஆயிரத்து 950 மதிப்பலான பருப்பு வகைகள், ரூ.13 ஆயிரத்து 500 மதிப்பலான கோதுமை பாட்கெட்கள், ரூ. 62 ஆயிரம் மதிப்பலான சமையல் எண்ணெய் டின்கள், ரூ. 20 ஆயிரம் மதிப்பலான குடிநீர் பாட்டில்கள், ரூ. 60 ஆயிரம் மதிப்பலான ப்ரெட், பேரீட்சை, பிஸ்கட் போன்ற பொருட்கள், ரூ. 9500 மதிப்பலான பால் பவுடர், ரூ. 37 ஆயிரத்து 500 மதிப்பலான பாய்கள், ரூ. 1 லட்சத்து 73 ஆயிரத்து 950 மதிப்பலான பெண் மற்றும் ஆண்களுக்கு தேவையான உடைகள், நைட்டிஸ், பெட்சிட், லுங்கி குழந்தைகளுக்கு தேவையான நாப்கின்ஸ்  மற்றும் மருந்து பொருட்கள், ரூ. 60 ஆயிரம் மதிப்பலான இதர பொருட்கள் என பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் என மொத்தம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் லாரி மூலம் ஏற்றி கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ள நிவாரண அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்  .அ.சிவஞானம், பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  செந்தில்குமாரி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.அனுராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து