முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்திலும் கோவை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. தென் கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் சீற்றமாக காணப்படும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து