முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : வைகை அணையில் இருந்து பெரியார், திருமங்கலம் பிரதான கால்வாயின் பாசன கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்,

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

120 நாட்களுக்கு...

மதுரை மாவட்டம், வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப் பகுதியில் ஒரு போக பாசன நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, மதுரை மாவட்டம், பெரியாறு பாசனப் பகுதியில் ஒருபோக பாசன பரப்பான 85,563 ஏக்கர் நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசனப் பரப்பான 19,439 ஏக்கர் நிலங்களுக்கும் என ஆக மொத்தம் 1,05,002 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 1130 கனஅடி வீதம் மொத்தம் 8461 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் இருப்பை பொருத்து 20-ம் தேதி (நாளை) முதல் வைகை அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடநான் ஆணையிட்டுள்ளேன்.

1,05,002 ஏக்கர் நிலங்கள்...

இதனால், மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.  மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து