Idhayam Matrimony

இம்ரான்கான் பதவியேற்பு நிகழ்ச்சியில் சித்து பங்கேற்பு: கட்சிகள் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சித்து கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு கட்சியினரும் சித்துவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமாபாதில் நடைபெற்ற இம்ரான் கான் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று சித்துவும் கலந்து கொண்டார். முதல் வரிசையில் அமர்ந்திருந்த அவரது அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதிபர் மசூத் கானும் அமர்ந்திருந்தார். பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்த பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி பாஜ்வா, சித்து அமர்ந்திருக்கும் இடத்துக்கு நேராக சென்று ஆரத்தழுவி சித்துவிடம் நட்பு பாராட்டினார். இந்நிலையில், இம்ரான் கான் பதவியேற்பு நிகழ்ச்சியில் சித்து கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சித்துவுக்கு பஞ்சாப் மாநில பா.ஜ.க. தலைவர் வைத் மாலிக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தானுக்கு சித்து சென்றது வெட்கப்பட வேண்டிய விஷயமாகும். ஒருபக்கம் நமது வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் படையினர் கொன்று கொண்டிருக்கின்றனர். மறுபக்கமோ, இம்ரான் பதவியேற்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ராணுவ தளபதியை சித்து கட்டி ஆரத்தழுவுகிறார். நமது வீரர்களை கொன்றதற்கு அவரிடம் சித்து நன்றியா தெரிவிக்கிறார்? என்றார்.

பஞ்சாப் மாநில முக்கிய எதிர்க்கட்சியான ஆம் ஆத்மியும், சித்துவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதே போல், அரியானா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ்ஜும் சித்துவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து