முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொட்டை மாடியில் தவித்த குழந்தை காப்பாற்றிய விமான படை வீரர்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரளாவில் மாநிலம் ஆழப்புலாவில் வெள்ளத்தில் சிக்கி இருந்த இரண்டு வயது குழந்தையை விமான படை ராணுவ வீரர் மீட்கும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 14 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. ஒரு லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதுவரை கேரளா வெள்ளத்திற்கு 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 700-க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள்.

கேரளாவில் ஆழப்புலா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஒருவாரமாக 2 வயது குழந்தையும் அவரின் தாயும் சாப்பிடாமல் இருந்துள்ளனர். வீட்டிற்குள் வெள்ளம் வந்த காரணத்தால் வீட்டு மொட்டை மாடியிலேயே இரண்டு நாட்களாக தூங்கி இருக்கிறார்கள். அங்கம் பக்கத்து வீட்டிலும் இதே நிலைமை நடந்துள்ளது. இந்த நிலையில்தான்  ராணுவ வீரர்கள் மூலம் காப்பற்றப்பட்டார்கள். ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அந்த வீட்டின் மொட்டை மாடியில் இறங்கிய வீரர்கள் முதலில் அந்த வீட்டில் இருந்த குழந்தையின் அம்மாவை காப்பாற்றினார்கள். அதன்பின் அந்த குழந்தையை காப்பாற்றினார்கள். பின் அதே பகுதியில் சிக்கி இருந்த மக்களை காப்பாற்றினார்கள்.

இதில், அந்த குழந்தை காப்பாற்றப்பட்ட வீடியோ மட்டும் வெளியாகி உள்ளது. குழந்தையை கயிற்றில் இறங்கி அந்த வீரர் காப்பாற்றி இருக்கிறார். குழந்தையை வாங்கியவுடன் குழந்தையின் தாய் சந்தோசத்தில், அந்த வீரருக்கு நன்றி சொல்லியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து