முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்த தயார் பாக். பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்த பாகிஸ்தான் தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் 22-வது பிரதமராக அவர் கடந்த 18-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்ற பிறகு முதல் முறையாக அந்நாட்டு ஊடகங்கள் வழியாக மக்களிடம் பேசினார்.

அப்போது, அண்டை நாடுகளுடனான உறவை பலப்படுத்தவே பாகிஸ்தான் விரும்புவதாக அவர் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக போராட வேண்டும் என்றும் தெரிவித்தார். 

பாகிஸ்தானில் ஊழல் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும் என உறுதி அளித்த அவர், மக்களின் வரிப் பணம் அவர்களின் நலனுக்காக மட்டுமே செலவழிக்கப்படும்.

உங்களின் பணம் முற்றிலும் பாதுகாக்கப்படும் என உங்களுக்கு வாக்களிக்கிறேன்.

நாங்கள் தினமும் எவ்வளவு பணம் சேமித்து வைத்திருக்கிறோம் என்பதை இனி மக்களுக்கு தெரிவிப்போம் என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து