முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கியது மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு வாழ்த்து

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

 கொச்சி, கேரளாவின் கொச்சி சர்வதேச விமான தளம் வெள்ளத்தில் மூழ்கியதால் முற்றிலுமாக நிறுத்தப்பட்ட பயணிகள் விமானப் போக்குவரத்து நேற்று காலை மீண்டும் தொடங்கியது.

பெங்களூருவிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த முதல் வர்த்தக விமானம் அலையன்ஸ் ஏர் விமானம்,  ஐ.என்.எஸ். கொச்சி கடற்படை விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கியது.

இதுகுறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு சமூக வலைதளத்தில், ஏர் இந்தியாவுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

ஏர் இந்தியா விமானம் நேற்று காலை ஐ.என்.எஸ். கருடா கடற்படை விமான தளத்திலிருந்து 9.15 மணிக்கு பெங்களூருக்கு புறப்பட்டது.

இதன் வழித்தடத்தில் கோவை, மதுரை ஆகிய நகரங்களும் இடம்பெறும்.

விரைவில் மற்ற விமானங்களும் இந்த முயற்சியில் சேரக் கூடும் என்று அமைச்சர் சுரேஷ் பிரபு தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து