எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளாமல் அரைகுறை புள்ளி விவரங்களுடன் அறிக்கை விடாமல், தனது அரசியல் பயணத்தை ஆக்கப்பூர்வமாக்கி கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் அறிவுரை கூறியுள்ளார்.
இது குறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சரும், அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளருமான ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
உண்மைக்கு புறம்பாக...
தமிழக விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகரிக்க, அம்மா வழியில் சிறப்புடன் பணியாற்றிவரும் அ.தி.மு.க. அரசின் நீர்ப்பாசனத் திட்டங்களையும், அத்திக்கடவு - அவினாசி திட்டத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அறைகுறை புள்ளி விவரங்களுடன் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை உண்மைக்கு புறம்பானதாகவும், காழ்ப்புணர்ச்சிகளின் மொத்த வடிவமாகவும் உள்ளது.
வீராணம் ஏரி...
சம்பா பயிறுக்கு தேவைப்படும் நீரை முன்கூட்டியே விவசாயப் பெருங்குடி மக்களுக்கு வழங்கும் வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
காவேரி டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் காவேரி நீர் சென்றடையும் வகையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மேற்பார்வையில் தூர்வாரும் பணிகளும், நீர் மேலாண்மைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, இப்பொழுது காவேரி பாயும் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தங்கு தடையின்றி சென்று கொண்டிருக்கிறது. காவேரி ஆற்றில் மிகுந்த அளவில் வந்துகொண்டிருக்கும் தண்ணீரை முழுமையாக பயன்படுத்தும் வகையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி அதி.மு.க. அரசால் நன்கு தூர்வாரப்பட்டு, அது தனது முழு கொள்ளளவை எட்டும் அளவிற்கு தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக வீராணம் ஏரியில் இருந்து கடந்த இரண்டு வாரங்களாக சென்னைக்கு குடிநீர் கொண்டுவரப்பட்டு மக்களின் தாகம் தணிக்கப்படுகிறது. வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் பெறும் விவசாயிகளுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.
அறைகுறை அறிக்கை...
இந்த உண்மையை ஏன் திரையிட்டு மறைக்க முயல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்?கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் பெறும் காவேரி ஆறு, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகிய ஆறுகள் அவற்றின் முழு கொள்ளளவில் நீரை கொண்டு செல்லும் வகையில் வினாடிக்கு 23,000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டிருக்கிறது.
இதனால் இந்த மூன்று பெரும் பாசன ஆறுகளால் பயன்பெறும் விவசாயப் பெருங்குடி மக்கள் அரசை நெஞ்சாரப் பாராட்டிய வண்ணம் உள்ளனர். இதனைப் பொறுக்க முடியாமல் தங்களுக்கே உரித்தான குறுகிய அரசியல் ஆதாய மனநிலையோடு அறைகுறை அறிக்கை ஒன்றினை யாரிடமிருந்தோ எழுதி வாங்கி எதிர்க்கட்சித் தலைவர். ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
7 பாசன வாய்க்கால்கள்...
அதி.மு.க. அரசு மேற்கொண்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக கரூர், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் 19 பாசன கால்வாய்களில் வினாடிக்கு 4,200 கனஅடி தண்ணீரும், அணைக்கரை என்று அழைக்கப்படும் கும்பகோணம் அருகில் உள்ள கீழ் அணையில் இருந்து 7 பாசன வாய்க்கால்கள் மூலம் கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வண்ணம் வினாடிக்கு 2,700 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டு, இப்பொழுது அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் வேளாண்மை பணிகளை விரைந்து மேற்கொண்டிருக்கின்றனர்.
அ.தி.மு.க. , அரசுக்கு விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கும் பேரன்பைத் தாங்கிக்கொள்ள முடியாத தவிப்பு மு.க. ஸ்டாலின் பெயரில் வெளியாகி இருக்கும் அறிக்கையில் தெரிகிறது.
தெரிந்திருக்க வேண்டாமா?
இந்த ஆண்டு வான் மழை வாரி வழங்கி இருக்கும் மிகுதியான நீரை சேமித்து விவசாயிகளுக்குப் பயன் அளிக்கும் வகையில் அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 924 குளங்கள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
புதிய நீர் மேலாண்மைத் திட்டங்களை அரசுக்கு வகுத்தளிக்க, ஓய்வு பெற்ற பொறியியல் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டு, அதன் முதல் கூட்டம் முடிவடைந்து அந்தக் குழு அரசுக்கு அளித்த ஆலோசனைகள் சிறப்புடன் செயல்படுத்தப்பட அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இந்த உண்மை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிந்திருக்க வேண்டாமா?
அடிப்படை உண்மைகளை....
தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் மற்றும் அணைக்கட்டுகள் கட்டுவதற்காக 1,000 கோடி ரூபாய் மதிப்பில் பெரும் திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டு அதன் முதற்கட்டமாக, தற்பொழுது 74 தடுப்பணைகளும், 7 அணைக்கட்டுகளும் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.
தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு நதிகளிலும், பாசன கால்வாய்களிலும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள, உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் நிதி உதவியுடன் தொடர் நிகழ்வாக நடைபெற்று வரும் திட்டங்களை தூர்வாரும் பணியோடு ஒப்பிட்டு குழம்பிப்போய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின். ஒரு முன்னாள் துணை முதல்வர் அறிக்கை வெளியிடும் முன்னர் அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டாமா?
காரணமாவது தெரியுமா?
அத்திக்கடவு - அவினாசி திட்டம் 1,652 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட அ.தி.மு.க. அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டில் காவேரி ஆற்றினை அக்னியாறு - தெற்கு வெள்ளாறு - மணிமுத்தாறு - வைகை குண்டாறு ஆகியவற்றுடன் இணைக்கும் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்கு சுமார் 6,994 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள், பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
காவேரி ஆறும், அதன் கிளை நதிகளும் இன்ன பிற டெல்டா பாசன நதிகளும் ஒரு வினாடிக்கு 30,000 கனஅடி நீரை மட்டுமே பாசனத்திற்கு கொண்டு செல்ல இயலும். அந்த அளவையும் தாண்டி தண்ணீர் வருகின்ற போது, அது தொடர்ந்து அவற்றின் வழியாக அனுப்பப்பட்டால் அது வெள்ள பெருக்கைத் தான் ஏற்படுத்துமே தவிர பாசனத்திற்குப் பயன்படாது.
எனவே தான் காவேரி பெருக்கெடுத்தால் கொள்ளும் இடமாக கொள்ளிடம் ஆறு திகழ்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கொள்ளிடம் ஆற்றின் இந்தப் பெயர் காரணமாவது தெரியுமா?
களங்கம் கற்பிக்க முயற்சி...
பல ஆண்டுகளுக்கு ஒரு முறை பருவ மழை ஏராளமாக பொழியும் பொழுது, பெருக்கெடுத்து வரும் வெள்ள நீர் கொள்ளிடம் போன்ற ஆறுகள் வழியாக வங்காள விரிகுடா கடலைத்தான் சென்றடையும். இது போல, வரலாற்றில் கடந்த கால கட்டங்களில், தி.மு.க ஆட்சிக் காலம் உட்பட ஏராளமாக வெள்ள நீர் கடலைச் சென்றடைந்துள்ளது. 2000-மாவது ஆண்டில் 385 டி.எம்.சி. தண்ணீர் வங்கக் கடலில் சென்று கலந்தது. 2008-வது ஆண்டில் 114 டி.எம்.சி தண்ணீர் கடலுக்குத் தான் சென்றது. என்னவோ இந்த ஆண்டுதான் தண்ணீர் வழிந்தோடி கடலுக்குப் போவதாக கற்பனை கதை கட்டி, களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார் மு.க. ஸ்டாலின்.
ஆக்கப்பூர்வமாக ஆக்கி...
திருவாரூரில் உள்ள ஐநூற்று பிள்ளையார் கோவில் குளத்தில் இப்பொழுது தண்ணீர் இல்லை என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை கூறுகிறது. இந்த ஐநூற்று பிள்ளையார் கோவில் குளத்தைச் சுற்றிலும் வீடுகள் கட்டப்பட்டுவிட்டதால் கடந்த 25 ஆண்டுகளாக அந்தக் குளத்தில் வரத்துக் கால்வாய்கள் வழியாக எப்பொழுதும் தண்ணீர் நிரம்பியதே இல்லை. வான் மழை மூலம் நேரடியாகப் பெறும் தண்ணீர் தான் அந்தக் குளத்தில் நிரம்பியிருக்கிறது.
இந்த உண்மை தெரியாமல் குளத்தில் தண்ணீர் இல்லை என்று கூப்பாடு போடுகிறது மு.க.ஸ்டாலின் பெயரில் வந்துள்ள அறிக்கை. எல்லாவற்றிலும் அரசியலைக் கலந்து, ஆதாயம் தேட மீண்டும், மீண்டும் முயற்சித்து தோல்வி பள்ளத்தாக்கில் துவண்டு விழும்.
மு.க.ஸ்டாலின் தன்னுடைய அரசியல் பயணத்தை ஆக்கப்பூர்வமாக ஆக்கிக் கொள்வது அவசியம். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது
23 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று (ஏப்ரல் 23) 22 காரட் ஆபரணத் தங்கம், பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.