முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாசனத்திற்காக 9 நாட்களுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,திருமூர்த்தி அணையில் இருந்து 9 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடிபழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

கோரிக்கைகள்... திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனமான தளி வாய்க்கால் பாசனத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு தளி வாய்க்கால் வடபூதிநத்தம் விவசாயிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

திருப்பூர் மாவட்டம், தளி வாய்க்கால் வடபூதிநத்தம் விவசாயிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனமான தளி வாய்க்கால் பாசனத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மொத்தம் 700 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

2,786 ஏக்கர் நிலங்கள் இதனால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2,786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், ஆலாம்பாளையம் கிராமம் பூசாரிநாயக்கன் ஏரிப் பாசன விவசாயிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து பூசாரிநாயக்கன் ஏரிப் பாசன பகுதிகளுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆவன செய்யுமாறு எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், ஆலாம்பாளையம் கிராமம் பூசாரிநாயக்கன் ஏரிப் பாசன விவசாயிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடிமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், ஆலாம்பாளையம் கிராமம் பூசாரிநாயக்கன் ஏரிப் பாசனத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து 39.87 மி.க.அடிக்கு மிகாமல் 23-ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடநான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள 88.56 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

 94,201 ஏக்கர் நிலங்கள் திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாலாறு படுகை முன்னோடி விவசாயிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாலாறு படுகை முன்னோடி விவசாயிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு 23.8.2018 முதல் மொத்தம் 9500 மி.க. அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94,201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து