முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது சி.பி.எஸ்.இ.க்கு ஐகோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,பள்ளிகளில் 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக் கூடாது என்பதை நாடு முழுவதும் விளம்பரம் செய்ய சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கண்டிப்பு காட்ட...சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பாடச்சுமையை குறைக்க கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்  நீதிபதி கிருபாகரன் 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவில் கண்டிப்பு காட்ட வேண்டும்.

2-ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் கூடாது என்பதை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி கிருபாகரன் கூறினார்.

நீதிபதி கேள்வி ? மேலும் நடிகர், நடிகைகளை வைத்து கேள்வி கேட்கும் அளவுக்கு சி.பி.எஸ்.இ.யின் தரம் குறைந்து விட்டதா என்றும், நாட்டின் முதன்மையான கல்வியானத்திற்கு இதுபோன்ற கேள்விகள் தேவையா என்றும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

மேலும் வழக்கறிஞர் புருஷோத்தமன் தொடர்ந்த வழக்கு விசாரணையை நீதிபதி இன்றைக்கு ஒத்தி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து