முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சை அருகே நெற்றிக் கண்ணுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

பூதலூர்,தஞ்சை அருகே நெற்றிக்கண்ணுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை சுற்றுவட்டார கிராம மக்கள் பார்வையிட்டு அதிசயித்து சென்றனர்.

நெற்றிக்கண்ணுடன் கன்றுக்குட்டி

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள நவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலிமுத்து (வயது 27).

விவசாயியான இவர் பசுமாடு வளர்ந்து வருகிறார்.

இவரது பசு மாடு ஏற்கனவே 2 கன்றுகளை ஈன்றுள்ளது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பசுமாடு ஒரு கன்றை ஈன்றது. அப்போது கன்றுக்கு நெற்றியில் கண் உள்ளது. மேலும் 4 துவாரத்துடன் 2 மூக்குகள் இருந்தது. 

நெற்றிக்கண்ணுடன், 2 மூக்குடனும் பிறந்த கன்றுக்குட்டி நலமாக உள்ளது. வழக்கம்போல் மற்ற கன்றுகளை போல துள்ளி குதித்து விளையாடுகிறது.

நெற்றிக்கண்ணுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை செங்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பார்வையிட்டு அதிசயித்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து