முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். தாக்குதல்: இந்திய வீரர் படுகாயம்

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குப்வாராவின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் இந்திய வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.

வீரர் காயம்

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அவ்வப்போது இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை வடக்கு காஷ்மீரிலுள்ள குப்வாரா மாவட்டத்தின் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். தாங்தர் பகுதியிலுள்ள இந்திய ராணுவத்தினர் மீது குறி வைத்து நடைபெற்ற இத்தாக்குதலில் கவுசால் சிங் என்னும் இந்திய வீரர் படுகாயமடைந்தார். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து