முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தமிழக அரசு நேற்று 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து காவல் துறை ஏடிஜிபி சிறப்பு அதிகாரியாக இருந்த ஷைலேஷ் குமார் யாதவ் சென்னையில் காலியாக இருந்த சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கு ஏடிஜிபியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மண்டபம் அகதிகள் முகாம் ஏடிஜிபி சிறப்பு அதிகாரியாக இருந்த சு.அருணாசலம் தமிழ்நாடு போக்குவரத்து காவல் துறை ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காவல் பயிற்சி ஐஜியாக இருந்த பி.நாகராஜன் சென்னை வடக்கு மண்டலத்துக்கு ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வடக்கு மண்டல ஐஜியாக இருந்த சி.ஸ்ரீதர் சென்னை கிரைம் சிஐடி பிரிவு ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கிரைம் சிஐடி பிரிவு ஐஜியாக இருந்த மகேஷ் குமார் அகர்வால் தெற்கு, கிரேட்டர் சென்னை சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனராகவும் ஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு, கிரேட்டர் சென்னை சட்டம் ஒழுங்கு பிரிவு ஐஜியாக இருந்த டாக்டர் எம்.சி.சாரங்கன் மாநில குற்ற ஆவணக் காப்பக ஐஜியாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

டிஜிபி அலுவலகத்தில் ஸ்தாபன ஐஜியாக இருந்த டாக்டர் ஆர்.தினகரன் வடக்கு மற்றும் கிரேட்டர் சென்னையின் சட்டம் ஒழுங்கு பிரிவு ஐஜி மற்றும் கூடுதல் போலீஸ் கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு கிரேட்டர் சென்னையின் சட்டம் ஒழுங்கு பிரிவு ஐஜி மற்றும் கூடுதல் போலீஸ் கமிஷனராக இருந்த எச்.எம்.ஜெயராம் டிஜிபி அலுவலக ஸ்தாபனத்தின் ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குற்ற ஆவணக் காப்பகத்தில் ஐஜியாக இருந்த சுமித் சரண் சென்னை அமலாக்கத்துறையில் காலியாக இருந்த ஐஜி பதவிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மேற்குப் பகுதி லஞ்ச ஒழிப்பு மற்று கண்காணிப்புத் துறை எஸ்பி எச்.ஜெயலட்சுமி சென்னை பொருளாதார குற்ற விசாரணை பிரிவு சிஐடி எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாநகர போக்குவரத்து மற்றும் குற்றப் பிரிவு துணை போலீஸ் கமிஷனராக இருந்த பி.தங்கதுரை சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு பிரிவு துணை போலீஸ் கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் நாகர சட்டம் ஒழுங்கு பிரிவு துணை போலீஸ் கமிஷனராக இருந்த ஜி.சுப்புலட்சுமி சென்னையில் உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை ஐஜியாக இருந்த எம்.விஜயலட்சுமி சென்னை தமிழ்நாடு அதிரடிப்படை பிரிவு எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் தமிழ்நாடு அதிரடிப்படை பிரிவு எஸ்பியாக இருந்த பி.ஆர்.வெண்மதி சென்னை ஆவடி ரெஜிமண்ட்டல் செண்டர் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் கம்மாண்ட்டண்ட் ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சிறப்பு போலீஸ் ஆவடி ரெஜிமண்ட்டல் செண்டர் கம்மாண்டண்ட் வந்திதா பாண்டே மத்திய குற்றத் தடுப்பு விசாரணை பிரிவு எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய குற்றத் தடுப்பு விசாரணை பிரிவு எஸ்பியாக இருந்த ஷியாமலா தேவி சேலம் மாநகர போக்குவரத்து மற்றும் குற்றப் பிரிவு துணை போலீஸ் கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து