முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்கள் கைவிடப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை - சர்வதேச கண்காணிப்பு அமைப்பு கவலை

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

பியாங்கியாங் : வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டங்கள் கைவிடப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று சர்வதேச அணு ஆயுதக் கண்காணிப்பு அமைப்பு (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்து நேரடியாக ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை ஐ.ஏ.இ.ஏ. அமைப்பு பெற்றிருக்கவில்லை. அந்த நாட்டின் அணு சக்தி நடவடிக்கைகள் குறித்த மிகக் குறைவான தகவல்களே எங்களுக்குக் கிடைத்து வருகிறன. எனினும், செயற்கைக்கோள் புகைப்படங்கள் போன்ற வெளிப்படையான தகவல்களின் மூலம் வட கொரியாவின் நடவடிக்கைகள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்.

எங்களது ஆய்வில், வட கொரியா தனது அணு ஆயுதத் திட்டங்களை நிறுத்திவிட்டதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

அணு ஆயுதங்கள் தயாரிக்கும் தனது நடவடிக்கைகளைக் கைவிடாமல், அதற்கு நேர்மாறான அறிக்கைகளை வட கொரியா வெளியிட்டு வருவது கவலையளிப்பதாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து