முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மக்களுக்கு பிரதமர் ஓணம் பண்டிகை வாழ்த்து

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்டு வர கேரள மக்களுக்கு இந்த ஓணம் பண்டிகை புதிய சக்தியை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கேரள மாநில மக்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தோள்கொடுப்போம் என்று இந்த இனிய நாளில் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேரள மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும், மேன்மையும் நிலைத்திருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் என்றும் மோடி கூறியுள்ளார்.

வரலாறு காணாத கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில், நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.

ஏராளமானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

வெள்ளத்தால் மாநிலமே புரட்டிப்போட்ட நிலையில், கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கலைக்கட்டவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து