முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீரில் கடும் நிலச்சரிவு

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

 ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து முக்கிய தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.

 ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைப் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை அவ்வப்போது நிறுத்தப்பட்டு, சாலை சீரமைக்கப்பட்டதும், யாத்திரை நடைபெற்றது.

இந்நிலையில் அங்கு பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் நாட்டின் பிற பகுதிகளை காஷ்மீர் பள்ளத்தாக்குடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் ராம்சு மாகர்கோட் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலை மூடப்பட்டது.

இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பழங்களை ஏற்றி வந்த நூற்றுக்கணக்கான லாரிகள், பயணிகள் வாகனங்கள் நெடுஞ்சாலையில் இரு புறங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து