முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுடனான அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க பாகிஸ்தான் விருப்பம்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், காஷ்மீர் உட்பட இந்தியாவுடனான எல்லா பிரச்சினைகளுக்கும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் விரும்புகிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெமூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குரேஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அண்டை நாடான இந்தியாவுடன் உறவை மேம்படுத்த பாகிஸ்தான் விரும்புகிறது. அத்துடன் காஷ்மீர் உட்பட எல்லா பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறது.

டெல்லி அரசுடன் பேச்சு நடத்த எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அதற்கு இருவரும் பங்கேற்க வேண்டும். ஒரு கையில் ஓசை எழுப்ப முடியாது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போதுள்ள உறவு ரகசியமானது அல்ல. இருதரப்பு அமைதி பேச்சு வார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும். ஆனால், எப்படி முன்னேற்றம் காண்பது என்பதை பார்க்க வேண்டும்.

இந்தியா - பாகிஸ்தான் உறவில் புரட்சி ஏற்படுவது குறித்து நான் பேசவில்லை. ஆனால் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படுமா இல்லையா என்பதைப் பற்றி இப்போதைக்கு சிந்திக்க வேண்டாம். முதலில் இருதரப்பும் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும்.

அதற்கான சூழலை உருவாக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் குரேஷி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து