முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிந்து நதி நீர் பகிர்வு தொடர்பாக இந்தியா-பாக். இடையே மீண்டும் பேச்சுவார்த்தை

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பாயும் சிந்து நதி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக, இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பிறகு, இரு நாடுகளுக்கிடையே நடைபெறவுள்ள முதல் பேச்சுவார்த்தை என்பதால், இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறியதாக, அந்நாட்டைச் சேர்ந்த டான் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

பாகிஸ்தான் சிந்து நதி ஆணையர் சயீது மெஹர் அலி ஷாவுடன் வரும் 29 - 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, இந்தியாவின் சிந்து நதி ஆணையர் பி.கே.சக்சேனா பாகிஸ்தான் வர இருக்கிறார். .

இனிவரும் காலங்களில் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும், இரு நாடுகள் சார்பாக நதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவது குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்படவுள்ளது என்று அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து