முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்வு

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      வர்த்தகம்
Image Unavailable

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்து வருகிறது. இதனால் ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 40 சதவீதம் முடங்கியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து 81.09 ஆக விற்பனையானது. டீசல் விலை 16 காசுகள் உயர்ந்து 73.54 ஆக விற்பனையானது. டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான விலை உயர்வை சந்தித்து இருப்பது வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து