முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் ராணுவம் நடவடிக்கை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தேடுதல் வேட்டை

ஜம்மு - காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதிகள் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி அத்துமீறி துப்பாக்கிச்சூடு சம்பவங்களை நடத்தி வருகிறது.

2 பயங்கரவாதிகள்...

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலம் முழுவதும் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் குறித்து கிடைக்கும் ரகசிய தகவல்களின் அடிப்படையில் ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். இந்நிலையில், அனந்த்நாக் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நேற்று அதிகாலை தொடங்கி துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து