முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் - நான்கு போலீசார் வீர மரணம்

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் 4 போலீசார் வீர மரணம் அடைந்தனர். அவர்களிடம் இருந்து 3 ஆயுதங்களையும், தீவிரவாதிகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

4 காவலர்கள்...

சோபியானில் உள்ள காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த காவல்துறை வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் 4 காவலர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் அவர்கள் வழியிலேயே மரணம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.

ஆயுதங்கள்...

அரஹாமாவில் பழுதான காவல்துறை வாகனத்தை சரி செய்யச் சென்ற காவலர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் வீர மரணம் அடைந்த காவல்துறையினரிடம் இருந்து 3 துப்பாக்கிகளையும் தீவிரவாதிகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். உயிரிழந்த காவலர்கள் மொஹம்மது இக்பால், ஜாவைத் அகமது, அடில் அகமது மற்றும் இஷ்பாக் அகமது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.தீவிரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து