முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குளத்தில் வாத்துகள் நீந்துவதால் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும் - திரிபுரா முதல்வர் சர்ச்சைக் கருத்து

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

அகர்தலா : குளத்தில் வாத்துகள் நீந்துவதால் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும், தண்ணீர் சுத்தமாகும் என்று திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட் வந்து விட்டது என்று கூறி சர்ச்சைக்குள்ளானவர் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார். இந்த நிலையில், மீண்டும் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

ருத்ரசாகரில் நடந்த படகுப் போட்டியை தொடங்கி வைத்த அவர் பேசுகையில்,

வாத்துகள் ஏரியில் நீச்சல் அடிக்கும் போது தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும். தண்ணீர் மறு சுழற்சியாகும். இதன் மூலம் மீன்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இயற்கை சூழலுக்கு இது மிகவும் உகந்தது. ஏரியின் அருகில் வசிக்கும் மீனவர்களுக்கு 50 ஆயிரம் வாத்துகளை அரசு வழங்கும் எனக் கூறினார். அவரது இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் கிண்டல் செய்து வரும் நிலையில் எதிர்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து