முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாமீன் நீட்டிப்பு நிறைவு: ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் லல்லு சரண்

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

ராஞ்சி,ஜாமின் நீட்டிப்பு காலம் நிறைவடைந்ததை அடுத்து, பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ், சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட லல்லு, ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்காக, அவருக்கு கடந்த மே மாதம் 11-ம் தேதி முதல் 6 வாரங்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர், ஆகஸ்ட் 14-ம் தேதி வரையிலும், ஆகஸ்ட் 20-ம் தேதி வரையிலும், ஆகஸ்ட் 27-ம் தேதி வரையிலும் அடுத்தடுத்து மூன்று முறை ஜாமீன் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் லல்லு தனது ஜாமீனை மேலும் நீட்டிக்குமாறு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, வரும் 30-ம் தேதிக்குள் ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நேரில் சரணடைய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து சி.பி.ஐ. நீதிமன்றத்தில் லல்லு பிரசாத் யாதவ் நேற்று சரணடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து