முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாத்மா எழுதிய கடிதத்தை ஏலம் விட அமெரிக்கா திட்டம்

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

பாஸ்டன், காதியின் மகத்துவத்தை வலியுறுத்தி ராட்டை என்ற பெயரில் மகாத்மா காந்தி எழுதிய தேதி குறிப்பிடாத கடிதத்தை அமெரிக்க இணையதளம் வாயிலாக ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளது. அக்கடிதம் 5 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஏல இல்லம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாபுவின் ஆசீர்வாதங்கள் என்ற தலைப்பில் யஷ்வந்த் பிரசாத் என்பவருக்கு குஜராத்தி மொழியில் காந்தி தனது கையெழுத்துடன் கூடிய கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் ராட்டை மூலம் கிடைக்கும் பொருளாதார சுதந்திரம் மிக முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி இணையதளம் வாயிலாக ஏலம் விடப்படவுள்ளது. அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட ஆர்.ஆர் ஏலம் அமைப்பு மூலம் இது நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து