முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி வந்த விமானத்தில் குடிபோதை பயணியால் சர்ச்சை விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு

சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நியூயார்க்கில் இருந்து புதுடெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில், பெண் அமர்ந்த இருந்த இருக்கைக்கு அருகே, குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் அளித்த புகாரையடுத்து, விசாரணை நடத்த சிவில் விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.

நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் ஒருவர் அமர்ந்து இருந்த இருக்கைக்கு அருகே, குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் சிறுநீர் கழித்து விட்டுச் சென்றார். இது குறித்து பாதிக்கப்பட்ட பயணியின் மகள் இந்திராணி கோஷ் என்பவர் டுவிட்டரில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கும், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துதுறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவுக்கும் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இது குறித்து டுவிட்டரில் தெரிவித்துள்ள அவர், புகார் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து உடனடியாக எனக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஏர் இந்தியா நிறுவனத்துக்கும், விமானப்போக்குவரத்து துறைக்கும் உத்தரவிடுகிறேன். இந்தச் சம்பவத்துக்காக இந்திரானி கோஷிடம் வருத்தமும், வேதனையும் தெரிவிக்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து