முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளம் ஸ்ரீகௌரி துளசியம்மன் கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      தேனி
Image Unavailable

 தேனி - பெரியகுளம் வடகரையில் ஸ்ரீகௌரி துளசியம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உற்சவ விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு  வருகிறது. இந்தாண்டு இத்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் ஸ்ரீபாலசுப்பிரமணிய திருக்கோவிலிலிருந்து அம்மனின் சக்தி கரகம் எடுத்து வரப்பட்டு இரவு கோவிலை வந்தடைந்து. பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மஹா தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலையில் பொங்கல் வைத்தலும் அதனை தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இத்திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.  இன்று மாலை அம்மன் சோலை செல்லும் நிகழ்வு நடைபெற உள்ளது. உற்சவ விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் மலர்மணி, துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் பாண்டியராஜ், பொருளாளர் பார்த்திபன் உள்ளிட்ட விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து