எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர், ஜெயலலிதாவின் ஆட்சிக்கு சூழ்ச்சி காரணமாக சறுக்கல் ஏற்பட்டால் அதை தடுக்கும் முதல் சக்தியாக நான் இருப்பேன் என்று வேலூர் பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வேலூரில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். கூட்டத்தில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது.
வழிநடத்திய ஜெயலலிதா:வேலூர் மாவட்டத்தின் பெருமை கூறும் அளவிற்கு இயற்கை கொடைகள் பல உள்ளன. ஆனால் கடல் இல்லை என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். ஆனால் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க.வின் தொண்டர்கள் கடல் அலைபோல திரண்டுள்ளனர். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை புனிதமாக கருதியவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்கு பின்னர் கட்சியை மீட்டெடுத்து இரும்பு கோட்டையாக உருவாக்கியவர் அவர். இந்தியாவிலேயே சிறந்த முதல்-அமைச்சராக திகழ்ந்தவர் ஜெயலலிதா. கட்சி பொறுப்பேற்றவுடன் அவர் பல சோதனைகளை தாங்கி, அவற்றை தகர்த்தெறிந்தார். பல கைக்கூலிகளின் முயற்சிகளை தோற்கடித்தார். அவர் கொண்டு வந்த தொலைநோக்கு திட்டங்கள் ஏராளம். எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சியை வழிநடத்தியவர் ஜெயலலிதா. அவருக்கு பின்னால் அவரது கட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து வருகிறது.
தி.மு.க. எதுவும் செய்யவில்லை:ஜெயலலிதா அரசியல் பயணத்தில் கரடுமுரடான பாதைகளை கடக்க உதவியவர்கள் கட்சியின் தொண்டர்கள் தான். அவர்கள் தான் ஜெயலலிதாவுக்கு பக்க பலமாக இருந்தார்கள். அவரது கட்சியை கைப்பற்ற யாராலும் முடியாது. ஆட்சியில் இருந்த போது காவிரி பிரச்சினையில் வழக்கு தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்தார். முல்லைபெரியாறு அணை விவகாரத்திலும் 142 அடி தண்ணீர் தேக்க வழக்கு தொடர்ந்து சிறப்பான தீர்ப்பை பெற்று தந்தார். ஆனால் இந்த பிரச்சினைகளில் ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை.
3 பிரச்சினைகள்:ஒரு கோடியே 96 லட்சம் பேருக்கு இலவச அரிசி, 4 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வீடுகள் போன்று பல்வேறு திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்து, அவர்களின் மனதில் வாழ்கிறார். அவர் ஆட்சியில் இருந்த போது பள்ளி கல்வித்துறைக்கு வருவாயில் 4-ல் ஒரு பங்கான ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கினார். அவர் வழி நடக்கும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தற்போது ரூ.33 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 48 சதவீத வருவாயை சமூக நலம் சார்ந்த திட்டங்களுக்கு ஒதுக்கியவர் ஜெயலலிதா. அவர் இறக்கும் தருவாயில் இருந்த போது நான் 3 பிரச்சினைகளை எதிர்கொண்டேன். ஒன்று ஜல்லிக்கட்டு, 2-வது வர்தா புயல், 3-வது சென்னை மாநகர குடிநீர் பிரச்சினை. அவை அனைத்தையும் நான் எதிர்கொண்டு வெற்றி பெற்றேன். ஜெயலலிதாவின் உடன் பல ஆண்டுகள் இருந்ததால் இந்த பிரச்சினைகளை என்னால் எதிர்கொள்ள முடிந்தது.
ஒரு கோடி பேரை சேர்ப்போம்:பின்னர் தான் எனக்கு வினை வந்தது. எனக்கெதிராக சதிவேலை நடந்தது. நான் முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை. ஜெயலலிதாவால் 2 முறை முதல்-அமைச்சராகி உள்ளேன். அவர் மறைந்த போது சில சம்பவங்கள் நிகழ்ந்தது. அவை அனைவருக்கும் தெரியும். நான் தர்மயுத்தம் தொடங்கினேன். அந்த தர்மயுத்தம் எதற்கு என்றால் சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என்பது தான் என் நோக்கமாக இருந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்தார். நடப்பதோ ஜெயலலிதாவின் ஆட்சி. இந்த ஆட்சி மீண்டும் தி.மு.க.விற்கு சென்று விடக்கூடாது என்று கருதினேன். ஒருவேளை ஆட்சி கவிழ்ந்தால் அதற்கு மூலகாரணமாக நான் இருந்து விடுவேன் என்ற அச்சம். வரலாற்றில் அந்த பழியை சுமக்கக் கூடாது என்று தான் அவருடன் இணைந்தோம். ஒரு கோடியே 50 லட்சத்துக்கு மேல் அ.தி.மு.க.வில் தொண்டர்களை சேர்ப்போம்.
தினகரன் லூசு:சசிகலா குடும்பத்துக்கு ஜெயலலிதா பெயரை கூற கூட அருகதை இல்லை. நான் ஒருமுறை ஜெயலலிதாவிடம் பேசிய போது தினகரனை டி.டி.வி.தினகரன் என்றேன். அவருக்கு கோபம் வந்து விட்டது. அப்போது வெறும் தினகரன் என்று அழைத்தால் போதும் என்றார். ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து துரத்தப்பட்டவர் தான் டி.டி.வி.தினகரன். அவர் தற்போது ஜெயலலிதாவின் பெயரை சொல்லி கட்சி நடத்துகிறார். உடன் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி ஆசை காட்டி வைத்துள்ளார். அவர் பக்கம் உள்ள தொண்டர்கள் உண்மையான தொண்டர்கள் இல்லை. ஜெயலலிதாவின் ஆட்சி நடக்கும் நம் பக்கம் உள்ள தொண்டர்கள் தான் உண்மையான தொண்டர்கள். என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறுகிறார். ஆனால் எப்போதும் சிரிப்பவர்கள் யார்? அவர்தான் லூசு. அதைத்தான் டி.டி.வி. செய்கிறார்.
ஆர்.கே.நகரில் வென்றது போன்று திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெறுவேன் என்கிறார். அவரால் அவரது தொகுதிக்கு கூட தற்போது செல்ல முடியவில்லை. பொதுமக்கள் ரூ.20 நோட்டை காண்பித்து அவரை விரட்டி வருகின்றனர். ஜெயலலிதாவின் ஆட்சிக்கு சூழ்ச்சி காரணமாக சறுக்கல் ஏற்பட்டால் அதை தடுக்கும் முதல் சக்தியாக நான் இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
புனித வெள்ளி: தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
29 Mar 2024சென்னை : புனித வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
-
கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் : மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
29 Mar 2024மதுரை : கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.