Idhayam Matrimony

அசாம் குடிமக்கள் பதிவேடு நடைமுறைகளை ஒத்தி வைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான இறுதி வரைவு பட்டியலில் புதிதாக பெயர்கள் சேர்ப்பு மற்றும் நீக்கம் செய்வதற்கான பணிகளைத் தொடங்குவதை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ஒத்திவைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த லட்சக்கணக்கான மக்கள் அசாமில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது தொடர்பான இறுதி வரைவு பட்டியல் கடந்த ஜூன் மாதம் 30 -ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் மொத்தத்தில், 40 லட்சத்துக்கும் அதிகமானோர் விடுபட்டிருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது.

இதையடுத்து, அந்த  இறுதி வரைவு பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்க்கும் மற்றும் நீக்கும் பணிகளை, கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 28-ம் தேதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதனிடையே, இந்த விவகாரத்தை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் மீண்டும் பெயர் சேர்ப்பதற்கான நடைமுறைகளில் முரண்பாடுகள் இருப்பதாகத் தெரிவித்தது.

இதையடுத்து, அந்தப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு கடந்த வாரம்  உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த விவகாரம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஆர்.எப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதிவேடு ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா தனது அறிக்கையை சமர்ப்பித்தார். அவரது அறிக்கை தொடர்பாக மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை குடிமக்கள் பதிவேடு நடைமுறைகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள்,

அடுத்த விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து