முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவால் மீது வீராங்கனை குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

இந்தோனேசியாவில்  நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இதில் இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் பெண்கள் மல்யுத்த பிரிவில் டில்லியை சேர்ந்த திவ்யா கரண் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றார். டில்லியில் திவ்யா கரண் உள்ளிட்ட வீராங்கனைகள் மற்றும் வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய திவ்யா கரண், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் நேரடியாக, "கடந்த கோல்டு டெஸ்டில் நான் தங்கப்பதக்கம் வென்றபோது  நீங்கள் என் முன்னேற்றத்துக்கு உதவுவதாக வாக்களித்ததோடு சரி, அதன் பிறகு என் தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்கக் கூட இல்லை. இப்போது நீங்களே எங்களுக்கு பாராட்டு விழா நடத்துகிறீர்கள்.

இந்த பாராட்டு விழாவை ஏழைக் குழந்தைகள் விளையாட்டுப் போட்டிகளில் எங்களைப் போல் முன்னேற நடத்துவதாக சொல்கிறீர்கள். ஆனால் எங்களுக்கு தேவையான நேரத்தில் நீங்கள் எவ்வித ஆதரவும் அளிக்கவில்லை. சரியான நேரத்தில் உதவி புரிந்தால் மட்டுமே அனைவரும் தங்கப் பதக்கம் வெல்ல முடியும்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து