முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெச்.டி.எப்.சி வங்கியின் துணை தலைவர் மாயம் ரத்தக்கறை படிந்த கார் கண்டெடுப்பு

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை : ஹெச்.டி.எப்.சி வங்கியின் துணை தலைவர் சித்தார்த் சங்வி (38) கடந்த 3 நாட்களாக மாயமாகியுள்ளார். ரத்தக் கறை படிந்த அவரின் கார் மும்பையின் ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு மும்பையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான மலபார் ஹில் பகுதியில் வசித்து வருபர் சித்தார்த் சங்வி. கடந்த 5-ம் தேதி காலை 8.30 மணிக்கு, தனது காரில் அவர் அலுவலகம் கிளம்பினார். அவரது அலுவலகம் கமலா மில்ஸ் பகுதியில் உள்ளது. ஆனால், சித்தார்த் சங்வி இரவு வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரின் மனைவி என்.எம். ஜோஷி மார்க், போலீசில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த போலீசாருக்கு நேற்று முக்கிய துப்பு கிடைத்துள்ளது.

நவி மும்பை பகுதியிலுள்ள ஐரோலி செக்டார் 11 பகுதியில் சித்தார்த் சங்வி பயணித்த மாருதி இக்னிஸ் கார் கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. அதில் ரத்தக் கறைகள் படிந்திருந்தன. பின் சீட்டில் கத்தியொன்றும் கண்டெடுக்கப்பட்டது. காரில் படிந்திருந்த ரத்தக் கறை சோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கமலா மில் காம்பவுண்டு பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை கொண்டு போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதில் இரவு 7.30 மணியளவில், சித்தார்த் சங்வி அலுவலகத்தை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது. ஆனால், அந்த இடத்தைவிட்டு அவர் கார் வெளியேறிய காட்சிகள் இல்லை. இரவு 7 மணி வரையில் கமலா மில் பகுதியிலுள்ள செல்போன் கோபுரத்தில் சித்தார்த் சங்வி செல்போன் சிக்னல் காட்டுகிறது. அதன் பிறகு, சித்தார்த் சங்வி செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சித்தார்த் சங்வி தொலைபேசி அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. யார், யாரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது, அழைப்பு சென்றது என்பது பற்றி ஆய்வு நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து