முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 10, 11-ம் தேதிகளில் கனமழை வெளுத்து வாங்குமாம்! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : நாளை 10-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் வெயில் சற்று அதிகமாகவே உணரப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பசலனம் காரணமாக நாளை 10-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குறிப்பிட கூடிய அளவில் மழை எதுவும் பதிவாகவில்லை. மேலும் வெப்பநிலையும் வழக்கத்தை விட சற்று குறைவாகவே காணப்பட்டது என்றும்  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து