முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. அரசை கவிழ்க்க தி.மு.க. சதித் திட்டம் தம்பிதுரை குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

கரூர்,தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க தி.மு.க. சதித் திட்டம் தீட்டி வருவதாக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார்.

பழைய ஜெயங்கொண்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசின் செயல்பாட்டை அ.தி.மு.க. கண்டிக்கிறது. பாரதீய ஜனதாவின் கையாலாகாத தனமே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம். முந்தைய காங்கிரஸ் அரசு, தற்போதைய பாரதீய ஜனதா அரசின் தவறான கொள்கையால்தான் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து வருகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு தி.மு.க. பாரதீய ஜனதாவுடன் உடன்பாடு வைத்துள்ளது. இதனால் இருவரும் அ.தி.மு.க.வை விமர்சித்து வருகின்றனர்.

சி.பி.ஐ. வருமான வரி சோதனை என்ற எந்த அச்சுறுத்தல்களுக்கும் அ.தி.மு.க. பயப்படாது. ஆளும் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சோதனை நடத்துவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க தி.மு.க. சதித் திட்டம் தீட்டி வருகிறது. சட்டசபையில் கலாட்டா செய்தார்கள். ஸ்டாலின் தனது சட்டையை கிழித்து கொண்டார். என்ன செய்தாலும் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து