எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் சந்திப்பதற்கு பாஜக உயர் நிலைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.பாஜக தேசிய செயற்குழுவின் 2 நாள் கூட்டம், தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது. பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் மறைவுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேசிய செயற்குழுக் கூட்டம் இதுவாகும்.
கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம், அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. அதில், பாஜகவின் தேசிய நிர்வாகிகளும், மாநிலத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தை தொடங்கி வைத்து அமித் ஷா பேசியதாவது:கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தல் வரலாற்றில் அது மிகப்பெரிய சாதனையாகும். அந்த தேர்தலைக் காட்டிலும், அடுத்த ஆண்டு (2019) நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக மேலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும். அந்த வெற்றியை உறுதிசெய்வதற்காக, பாஜக தொண்டர்கள் அனைவரும் பாட வேண்டும்.அதுமட்டுமன்றி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் பாஜகவின் வெற்றிக்கு தொண்டர்கள் உழைத்திட வேண்டும் என்று அமித் ஷா கேட்டுக் கொண்டார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் அந்தக் கூட்டத்தில், பாஜகவின் உள்கட்சித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கட்சியின் விதிமுறைப்படி, ஒருவர் தொடர்ச்சியாக 2 முறை தலைவர் பதவியை வகிக்கலாம்.கட்சியின் தலைவரான அமித் ஷாவின் பதவிக் காலம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, கட்சியின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தேர்தலும், 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களும் நடைபெற இருப்பதால், உள்கட்சித் தேர்தலை நடத்துவதற்கு குறுகிய காலமே உள்ளது. எனவே, அமித் ஷா தலைமையிலேயே பொதுத் தேர்தலை சந்திப்பதற்கு தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
தேர்தல் வியூகம்: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதைத் தொடர்ந்து, ரூபாய் மதிப்பு சரிவு, தினந்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை ஆகியவை காரணமாக, மத்திய பாஜக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அண்மையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை நீர்க்கச் செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்தது. அந்தச் சட்டம், தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு தலித் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இதையடுத்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை மீண்டும் வலுப்படுத்தும் வகையில் சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், அரசின் இந்த நடவடிக்கை, சில சமூகத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைவர்கள் சிலரும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், தலித் மற்றும் பழங்குடியின மக்களையும், பிற ஜாதி மக்களையும் சமதானப்படுத்தி, அவர்களின் ஆதரவைப் பெற வேண்டிய நிலையில் பாஜக உள்ளது. தலித் சமூகத்தினரின் நம்பிக்கையைப் பெறவே, தில்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில், பாஜக தேசிய குழுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர, கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு படேல் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயக் கடனை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கட்சி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இத்தனை சவால்களையும் எதிர்கொண்டு அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தேசிய பொதுக் குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணியே இருக்காது: மகராஷ்டிராவில் பிரதமர் மோடி பேச்சு
20 Apr 2024மும்பை, தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி சரிந்து விழும்.