முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியை பார்க்கச் சென்ற மல்லையா

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

லண்டன்,இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தை கண்டு ரசிக்க தொழிலதிபர் விஜய் மல்லையா சென்றார்.

இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று, அதனை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையா, நாடு கடத்தக் கோரும் வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.இந்தச் சூழ்நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தை கண்டு ரசிப்பதற்காக விஜய் மல்லையா செல்வது போன்ற விடியோ ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அந்த விடியோவில், ஓவல் மைதானத்தின் நுழைவு வாயில் அருகே காரில் வந்திறங்கும் மல்லையா, நுழைவுச்சீட்டை காண்பித்து செல்வது பதிவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து