முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் செல்லூர் ராஜூ இல்லத்தில் மு.க. அழகிரி: தாயார் மறைவுக்கு நேரில் ஆறுதல்

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை : கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேரில் சந்தித்து, அமைச்சரின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.

அழகிரி அஞ்சலி

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாய் ஒச்சம்மாள் கடந்த 30-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவருக்கு ஆறுதல் கூற மு.க.அழகிரி நேற்று காலை அவரது வீட்டுக்கு வந்தார். செல்லூர் ராஜூவின் தாய் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி அழகிரி அஞ்சலி செலுத்தினார்.

ஆறுதல் கூறுவதற்கு...

பின்னர், அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் சிறிது நேரம் அவர் பேசினார். அமைச்சர் செல்லூர் ராஜூ, மு.க.அழகிரிக்கு சாதகமாக பேசி வரும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. பின்னர் வெளியே வந்த அழகிரி, செய்தியாளர்களிடம் பேசும்போது, அமைச்சர் செல்லூர் ராஜூக்கு ஆறுதல் கூறுவதற்காகவே அவரது இல்லத்திற்கு வந்ததாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து