முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்க வேண்டுகோள் விடுக்கும் பாலிவுட் நடிகர்

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை,இந்தியாவில் கஞ்சா விற்பனையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாலிவுட் நடிகர்களில் ஒருவர் உதய் சோப்ரா. இவர் பிரபல இயக்குநர் யஷ் சோப்ராவின் மகனாவார். இந்தியாவில் கஞ்சா விற்பனையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று இவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-இந்தியாவில் கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். முதலாவதாக இது நமது கலாச்சாரத்தில் ஒரு பகுதியாக உள்ளது. அத்துடன் விற்பனை சட்டபூர்வமாக்கப்பட்டு வரி விதிக்கப்பட்டால் நமக்கு நிறைய வருவாய் கிடைக்கும். அத்துடன் இதனுடன் சேர்ந்துள்ள குற்றச் செயல்பாடுகளையும் ஒழிக்க முடியும். 

மிக முக்கியமாக அதில் நிறைய மருத்துவ பலன்களும் உள்ளது. நான் இதனை பயன்படுத்துவதில்லை. ஆனால் கஞ்சா செடியுடனான நமது வரலாற்றைப் பார்க்கையில் இது ஒரு சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்று தோன்றுகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து