முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2019 - உலக கோப்பை வரை டோனி விளையாட வேண்டும் முன்னாள் வீரர் சேவாக் கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி,அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிகள் வரை மகேந்திர சிங் டோனி இந்திய் அணியில் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் சேவாக தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை...இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளன. இதற்காக அனைத்து நாட்டு அணிகளும் தயாராகி வருகின்ற்ன போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி அங்கு தொடர்ந்து 8 தொடர்களை கைப்பற்றியுள்ளது.  இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிகள் வரை மகேந்திர சிங் டோனி இந்திய் அணியில் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் சேவாக தெரிவித்துள்ளார்.

ரிஷப் பந்த் சதம்...இதுதொடர்பாக, இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் டிவி பேட்டி ஒன்றில் கூறுகையில், இங்கிலாந்தில் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அணியில் இடம் பிடித்து அறிமுக டெஸ்டில் சதமடித்துள்ளார். தற்போது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ரிஷப் பந்த், உலகக் கோப்பை போட்டிக்கு முன் 15  அல்லது 16 போட்டிகளில் விளையாட உள்ளார்.

டோனி பங்களிப்பார்....அவரை விட டோனிக்கு இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் உண்டு. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் இந்தியா கோப்பை வெல்ல டோனி நிச்சயம் பங்களிப்பார். எனவே அதுவரை டோனி கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட வேண்டும். இது எனது சொந்த கருத்து மட்டுமே என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து