முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை சபரிமலை நடை திறப்பு:பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம்,நாளை சபரிமலை நடை திறக்கபடுவதால் அங்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

நடை திறப்பு...கேரள மாநிலத்தில் பெய்த கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கால், பம்பை நதி உருக்குலைந்தது. இதனால், சபரிமலையில் நடைபெற்ற நிறை புத்தரிசி, ஆவணி மாத பூஜை மற்றும் திருவோண பூஜைகளுக்கு, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், புரட்டாசி பூஜைக்கு பக்தர்கள் தயாராகி வருகின்றனர். நாளை சபரிமலை நடை திறக்கபடுகிறது. இதனால் அங்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

கட்டுபாடுகள்...முழுமையாக சீரமைப்பு பணிகள் நிறைவடையாத நிலையில், பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உணவு - குடிநீர் கொண்டு வர வேண்டும், காடுகளுக்குள் செல்லக் கூடாது, புதை குழிகள் உள்ளதால் அனுமதிக்கப்படாத இடங்களுக்கு போக கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தேவசம்போர்டு அமல்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து