முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் 3-வது முறையாக கட்சித் தலைவராகிறார் பிரதமர் ஷின்சோ அபே

சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

டோக்கியோ,ஜப்பானின் ஆளும் கட்சித் தலைவராக 3-வது முறையாக தேர்வு செய்யப்பட உள்ள பிரதமர் ஷின்சோ அபே (63), அந்நாட்டு அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் செய்ய திட்ட மிட்டுள்ளார்.

முற்போக்கு ஜனநாயக கட்சி யின் (எல்டிபி) தலைவரான ஷின்சோ அபே, கடந்த 2012-ம் ஆண்டு முதல் பிரதமராக பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், எல்.டி.பி கட்சித் தலைவர் தேர்தல் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இதில் அபேவுக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிங்கெரு இஷிபா போட்டியிடுகிறார். எனினும், மொத்தம் உள்ள 405 வாக்குகளில் 300 வாக்குகள் அபேவுக்குக் கிடைக்கும் எனத் தெரிகிறது.

இதனால் எல்டிபி கட்சித் தலைவராக அபே 3-வது முறையாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பார். இதன்மூலம் நீண்டகாலம் கட்சித் தலைவராக பதவி வகித்தவர் என்ற பெருமை இவருக்கு கிடைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து