முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்ட முதல் நீர்மூழ்கி போர்க்கப்பலை உருவாக்கியுள்ள தென் கொரியா

சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

சியோல்,ரூ. 5,031 கோடி செலவில் 3,000 டன் எடையில் அதி நவீன நீர்மூழ்கி போர்க் கப்பலை தென்கொரியா உருவாக்கியுள்ளது. டோசன் ஆன் சாங்-ஹோ என்ற நீர்மூழ்கியில் அதி நவீன ஏவுகணைகள் பொருத்தப் பட்டுள்ளன.
டோவூ கப்பல் கட்டுமானத் தளத்தில் நடந்த விழாவில் புதிய நீர்மூழ்கி போர்க்கப்பல் தொடங்கி வைக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அதிபர் மூன் ஜே இன் பேசிய போது, தென் கொரிய பாதுகாப்புத் துறையில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளோம். அதே நேரம் கொரிய தீப கற்பத்தில் அமைதி முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் என்று தெரிவித்தார்.

இதனிடையே தென்கொரிய, வடகொரிய மூத்த ராணுவ தள பதிகள் பான்மூன்ஜியோம் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எல்லையின் குறிப்பிட்ட பகுதிகளில் ஆயுதங்களை வாபஸ் பெற இருதரப்பும் ஒப்புதல் தெரிவித்தன. வடகொரியாவின் கேசாங் நகரில் இருநாடுகள் தரப்பில் ஒருங்கிணைப்பு அலுவலகம் திறக்கவும் முடிவு செய்யப்பட்டது. வடகொரியா, தென்கொரியா இடையிலான 3-வது உச்சி மாநாடு வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. இதில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் பங்கேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து