முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஷவாயு தாக்குதல் விவகாரம்:பிரிட்டன் குற்றச்சாட்டுக்கு ரஷ்யா மறுப்பு

சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

மாஸ்கோ,உளவாளி மீதான விஷவாயு தாக்குதல் விவகாரத்தில் ரஷ்யாவை சேர்ந்த 2 பேருக்கு தொடர்புள்ளது என்று பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளது. இதனை ரஷ்யா மறுத்துள்ளது.

ரஷ்ய உளவாளி செர்ஜி ஸ்கிரிபால் தனது பணிக் காலத்தின்போது பிரிட்டனுக்கு ரகசியமாக தகவல்களை அளித்து வந்தார். இதன்காரணமாக 2004-ம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2010-ல் அமெரிக்காவும் ரஷ்யாவும் பரஸ்பரம் உளவாளிகளை விடுதலை செய்ததில் செர்ஜி ஸ்கிரிபாலும் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பிறகு பிரிட்டனின் சாலிஸ்பரியில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த மார்ச் 4-ம் தேதி செர்ஜி ஸ்கிரிபாலும் அவரது மகள் யூலியாவும் அங்குள்ள ஓட்டலுக்கு சென்றபோது இருவர் மீதும் விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டது.

ரஷ்ய சுற்றுலா பயணிகள் அலெக்சாண்டர் பெட்ரோவ், ரஸ்லன் பாஷிரோவ் ஆகியோர் ஸ்கிரிபாலையும் யூலியாவையும் கொல்ல முயற்சி செய்தனர் என்று பிரிட்டிஷ் அரசு அண்மையில் குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், மாஸ்கோவில் கூறியதாவது:-
பிரிட்டன் குற்றம் சாட்டும் நபர்கள் சுற்றுலா பயணிகள். அவர்களுக்கும் ரஷ்ய உளவு அமைப்புக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. விஷவாயு தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உதவ ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால் எங்கள் உதவியை ஏற்க பிரிட்டன் மறுத்து விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து