முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. ஆட்சியில் 23 நிதி மோசடியாளர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோட்டம் காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மத்திய பா.ஜ.க. ஆட்சியில் 23 நிதி மோசடியாளர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டதாக காங்கிரஸ் கட்சி புதிய குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

டெல்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்ஜில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த குற்றச்சாட்டை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி போன்ற தொழிலதிபர்கள் நாட்டை விட்டு வெளியேறி, வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர். இதிலிருந்து பொது மக்களின் வரிப்பணத்துக்கு காவலராக மத்திய அரசு செயல்படவில்லை என்பதும், வங்கிகளில் நிதி மோசடி செய்யும் நபர்களை வெளிநாட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் அமைப்பாக பா.ஜ.க. செயல்படுவதும் நிரூபணமாகியுள்ளது.

ஆர்.டி.ஐ மூலம் கிடைத்த தகவல்களை இணையதளங்களில் சமூக ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் நாட்டில் நிதி மோசடிகள் அதிகரித்து விட்டதாகவும், நாட்டை விட்டு தப்பியோடிய நிதி மோசடியாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல், நாட்டை விட்டு 23 பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. பா.ஜ.க. அரசால் அத்தகைய நபர்கள் யாரும் இதுவரை நாட்டுக்கு திருப்பி அழைத்து வரப்படவில்லை.

இதன்மூலம், பொது மக்களைக் காட்டிலும், மோசடியாளர்களுக்கு மத்திய அரசு விசுவாசமாக இருப்பது தெளிவாகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் கண்காணிப்பின்கீழ் நாட்டைவிட்டு 23 நிதி மோசடியாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்றது குறித்தும், பா.ஜ.க.வுக்கும், அவர்களுக்கும் இடையே எத்தகைய தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துகிறது என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து